Tuesday, 19 July 2011

முதல் பயணம்


இடம் : ரயில் பெட்டி
                                                       

  ஒருவழியாக எனது Compartment '  கண்டுபிடித்து என் இடத்தை பிடித்துஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் உட்கார்ந்தேன் .

  
எதிரில் என்னை போல்என்  வயது உள்ள ஒருவர் உட்கார்ந்திருந்தார் .

  TTR வரும் வரை பேச்சு துணைக்கு ஆச்சு என்று பேச ஆரம்பித்தேன்வழக்கம் போல்

 சார், Fan போட்டுக்கவா , சென்னை செம வெயில் இல்ல சார் ? என்றேன் தலை அசைந்தது மெதுவாக.

“அப்புறம் சார்என் பேர் ஆதி” என்று கை நீட்டினேன்

அவரும் கை கொடுத்தார்பெயர் சொல்லவில்லை .

இருந்தாலும் TTR  வராத காரணத்தால்மற்றும்  Compartmentல் எந்த Figure' ம் இல்லாத காரணத்தால் பேச்சை தொடர்ந்தேன்.

"சார், உங்க பேரு?"

"விடுதலை"

"எது காந்தி தாத்தா வாங்கி தந்தாரே " என்று மொக்கை ஜோக் அடித்தேன்

மொக்கையை தாங்கி கொண்டு மெலிதாக சிரித்தார் .

அப்போது என் phone சிணுங்கியது, என் கேர்ள் Friend
(வழக்கம் போல் சிரிப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிந்தது)
வேறு யாரும் இல்லாத காரணத்தால் அவரிடமே புலம்பினேன்

"யாரையும் லவ் மட்டும் பண்ணிராதீங்க சார், பொண்ணுங்கனாவே கடுப்பு ஆவுது"

மறுபடியும் ஒரு புண்சிரிப்பு( முதலில் மூன்றாம்  பிறையாக , இப்பொழுது சற்று மலர்ந்திருந்தது )

"அப்புறம் எந்த கட்சிக்கு  சார்  ஓட்டு போட்டிங்க ?" 

" எனக்கு ஓட்டு உரிமை இல்லை "

"ரொம்ப நல்லது சார், இங்க எந்த தலைவன் ஒழுங்கா இருக்கான் ஓட்டு போட, எங்க பாத்தாலும் ஒரே லஞ்சம், ஊழல், எதுக்கு எடுத்தாலும் காசு, பேசாம எங்கையாவது வெளிநாட்டுக்கு போயிரலாம்'னு இருக்கு "

இதை சொல்லி முடிக்கும் போது அவர் கண்களில் சற்று மாறுதலை பார்த்தேன்.
அவர் உண்மையாக பேச தொடங்கினார்.

"ஐயா, நாடு ,தலைவன், காதலி, வேலை, இப்படி வாய்க்கு வந்த படி பேச சுதந்திரம், அனைத்தும் இருந்தும் நீங்கள் நாடு மாற துடிக்கிறீர்கள்,
ஆனால், ஒரு நாட்டை, தலைவனை, சொந்தங்களை, சுதந்திரத்தை தொலைத்த நாங்கள்
 எங்கள் நாட்டில் இருக்கவோ  அல்லது இறக்கவோ தான் ஆசை படுகிறோம் ". 

(மனதில் விடை தெரிந்தாலும், நாக்கு முந்திக் கொண்டது)
"நீங்க..... எந்த நாடு?"

"யாழ்ப்பாணம் ... இலங்கை..."

Friday, 8 July 2011

                               இது தான் ஆரம்பம்

















வணக்கம்,
இயங்காத வாழ்க்கையில் இன்பமில்லை
இயங்கு! இயங்கு! மனிதனே
இயங்கு, வெற்றியை நோக்கியாவது -
தோல்வியை நோக்கியாவது
                             - வைரமுத்து

     என்னை மிகவும் கவர்ந்த வைரமுத்துவின்  வரிகள் இவை, ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் ஆசைப்படுவது, காலம் என்ற கற்சுவரில் தன் பெயரை பொறித்து விட வேண்டும் என்பது தான். ஆனால் காலத்தின் சுவரில் எஞ்சி இருப்பது சில மனிதர்களும், பல  படைப்புகளும். அதற்கு எடுத்துக்காட்டே நான்கு வேதங்களும், திருக்குறளும், குரானும், பைபிளும், அப்படிப்பட்ட முயற்சியே இந்த Blog ம்.

    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது தன்னிறைவு. அப்படி தன்னிறைவு அடையாமல் தன் திறமையை வீணடித்துக் கொண்டிருக்கும், இந்த நடுத்தரச் சமுதாயத்தின் செல்ல  பிள்ளைகளான Software Engineer களில் நானும் ஒருவன் . என் ஏக்கங்களை, கோபங்களை, விரக்திகளை, தோல்விகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இந்த கணினி உலகத்தில், என் உள்உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்ட இந்த எழுத்துப்பிழையை ஆரம்பிக்கிறேன். எந்த ஒரு செயலுமே பிழையில்லாமல் இருக்காது என்ற பொது தத்துவத்தையே  என் தலைப்பாய் ஏற்று, இந்த வலைதளத்தை துவக்குகிறேன்.  இதற்கு தாங்கள் ஆதரவு  தர வேண்டுகிறேன்........


---தொடரும்..